ஶ்ரீமுஷ்ணம் வட்டம் தேத்தாம்பட்டு கிராமத்தில் பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

2017 ஆம் ஆண்டு இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

வீடு கட்ட வசதியில்லாது இருந்த பழங்குடியின மக்களுக்கு ‘ எண்ணங்களின் சங்கமம்’ என்ற தொண்டு நிறுவனம் 14 வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது.

புதுமனை புகுவிழாவில் சிதம்பரம் சார் ஆட்சியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்வில் ‘எண்ணங்களின் சங்கமம்’ தலைவர் J பிரபாகரன், ஶ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Previous
Previous

Corona Relief work

Next
Next

Issuance of ST certificates to Irulas