Issuance of certificates to Irulas

பல்லாண்டு காலம் சாதி சான்றிதழ் இல்லாமல் தவித்து வந்த இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கிய சிதம்பரம் சார் ஆட்சியர் அவர்களுக்கு நன்றி.

பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தட்டை கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

 

அதனையொட்டி நேரடியாக கள ஆய்வினை மேற்கொண்ட சிதம்பரம் சார் ஆட்சியர் அவர்கள் கொத்தட்டையில் வசிக்கும மக்கள் உள்ளிட்ட 115 இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து பல்லாண்டு காலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சாதி சான்றிதழ் இல்லாத ஒரே காரணத்துக்காக புறக்கணிக்கப்பட்ட,

துவக்க கல்வி உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் இழந்து தவித்த, இருளர் இன மக்கள்

இன்று சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் திரு மதுபாலன் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Previous
Previous

Houses for Tribals

Next
Next

Bus Launched for Identifying Special Children